கோவை ஜூன் 3 கோவை ராமநாதபுரம் பெருமாள் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர்பிரேம் தாஸ் ஆகியோர்நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள், அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சவுரிபாளையம் சாம்சன் (42) தர்மபுரி முருகன் ( 37) நஞ்சுண்டாபுரம் வேல்முருகன் ( 35 ) தர்மபுரி சிவகுமார் ( 23 ) ராதாகிருஷ்ணன் (36) பாப்பிரெட்டிப்பட்டி வெற்றிவேல் ( 30 ) பால்ராஜ் ( 34 ) அனுமந்தன் (28) ஓலம்பஸ் சக்திவேல் ( 40 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து ரூ. 57 ஆயிரத்து 900 பணமும், சீட்டுகளும் கைப்பற்றப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0