நர்ஸ் – இளம் பெண் திடீர் மாயம்

இவரது மனைவி சந்தியா ( வயது 20 )இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். இவரது கணவர் தூத்துக்குடியில் பில்டிங் கட்டுமான வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த 6-ந்தேதி கோவையில்நடந்த உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க வந்திருந்தார்.ரத்தினபுரி கண்ணப்ப நகரில் உள்ள தனது அண்ணன் திருமுருகன் வீட்டில் தங்கி இருந்தார்.நேற்று அங்குள்ள கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது அண்ணன் திருமுருகன் ரத்தினபுரி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.இதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தைசேர்ந்தவர் மது .இவரது மகள் முனியம்மா (வயது 22) இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார், கடத்த 6-ம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை மது கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.