கோவை ஜூன் 11 கோவை பி.என்.புதூர், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் ( வயது 51) இவர் நேற்று கோவை தடாகம் ரோட்டில் மொபட் ஒட்டிக்கொண்டு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் கோயில் ராஜ் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து அவரது மகன் ஆனந்த் கோவை மேற்கு பகுதிபோக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0