தனியார் டவுன் பஸ் மோதி கேரளா வாலிபர் சாவு

கோவை ஜூன் 19 கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்கால தோப்பு பரம்பில்அஜ்மல் ( வயது 35 )இவர் நேற்று காந்திபுரம் ஆர்.வி. ரவுண்டானா அருகே ரோடு ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த தனியார் டவுன் பஸ் இவர் மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார் இது குறித்து கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வுபோலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக பாப்பநாயக்கன்பாளையம் ,லட்சுமி மில் காலனி சேர்ந்தபஸ் டிரைவர் சோமசுந்தரம் ( வயது 51) மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.