ரயிலில் தமிழில் பெயர் பலகை வைக்க கோரி கோவை ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டம்

தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் 30 பேர் கைது..கோவை ஜூன் 26கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக பெங்களூருக்கு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயச்கப்பட்டு வருகிறது .மிகவும் பழமை வாய்ந்த இந்த ரயிலில் பழைய பெட்டிகள் மாற்றப்பட்டு எல்.எச்.பி. என்ற ஜென்மன் தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன .இந்த ரயில் பெட்டியில் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் எர்ணாகுளம்- பெங்களூரு வரை இயக்கப்படும் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் மொழியைத் தவிர இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், ஆகிய மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன .தமிழ் எழுத்து மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது .இதை கண்டித்துகோவை ரயில் நிலையத்தில் எர்ணாகுளம்- பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் பெட்டியில் தமிழில் பெயர் பலகை ஓட்டும் போராட்டம்தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில்நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது..இந்தப் போராட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அதன்படி நேற்று போராட்டத்தில் ஈடுபட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைகளில் எர்ணாகுளம், பெங்களூரு ரயில் என்று தமிழில் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை ரயிலில் ஓட்டுவதற்காக கொண்டு வந்தனர். கோவை ரயில் நிலையம் நுழைவு வாயில் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களைஉள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது தடையை மீறி போராட்டக்காரர்கள் ரயில் நிலையம் உள்ளே செல்ல முயன்றனர்.இதை யடுத்து போலீசார் அவர்களை தடுத்து கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர்..