நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக் கபட்டு வருவதை கண்டித்து, தலைமை கழக அறிவிப்பின்படி நீலகிரி மாவட்ட திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம், கோத்தகிரி மார்கெட் திடலில் மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில், தேர்தல் பணி செயலாளர், அரசு கொறடா கா.ராமசந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது ,கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லைகண்ணன் வரவேற்றார், கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் கந்திலிகரிகாலன், ஒப்பிலாமணி, ஜே.வீரமணி ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றினர். மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்டத்திலுள்ள தலைமை கழக நிர்வாகிகள், நகர-ஒன்றிய-பேரூர்-கிளை கழக செயலாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாள ர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக செயல்வீரர்கள் திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0