வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம். வெளிமாநில அழகி உட்பட 3 பேர் கைது

கோவை ஜூன் 3 கோவை சரவணம்பட்டி, வரதராஜ் நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பாப்பநாயக்கன்பாளையம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ஜெயந்த் குமார் ( வயது28) சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் ( வயது 33) மேற்கு வங்காளத்தை சேர்ந்த நூதி சர்தார் (வயது 27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.