கோவை ஜூன் 24 கோவை சாய்பாபா காலனி, கே. என். புதூர் கவுண்டப்பன் தெருவை சேர்ந்தவர், இஜாஸ் அகமது ( வயது 32) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.. சம்பவத்தன்று இவரது வீட்டின் கதவை உட்பக்கமாக பூட்டிவிட்டு படுக்கை அறைக்கு சென்றார். அதன்பிறகு அவரது வீட்டு வளாகத்துக்குள் மர்ம ஆசாமி ஒருவன் நுழைந்தார் . ஜன்னல் கதவை திறந்தார். அதன் பிறகு கொசு வலையை கிழித்து கையை உள்ளே நுழைத்து கதவை திறந்து வீட்டிற்குள் புகுந்தார் .பின்னர் அந்த நபர் பீரோவை நைசாக திறந்து அங்கிருந்த சிங்கப்பூர் டாலர் 5, அரேபியா ரியால் 60, தங்க நாணயங்கள் 4 பணம் ரூ 25 ஆயிரம் ஆகியவற்றை திருடினார். இதை தொடர்ந்து அருகில் உள்ள இஜாஸ் அகமதுவின் மாமனார் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ 8 ஆயிரம்பணம் ,4 தங்கள் நாணயங்களை திருடிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0