கோவை ஜூன் 16 கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் மரகதம் ( வயது 72 )இவரது முதல் கணவர் இறந்துவிட்டார். இதனால் 1996 -ஆம் ஆண்டு சண்முகம் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார் .மரகதம் தனது முதல் கணவரின் சொத்துக்கள்மூலம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரிசிபாளையம் கடந்த1998 -ஆம் ஆண்டு 8 சென்ட் நிலம் வாங்கினார் இந்த நிலையில் மரகதத்திற்கும், அவருடைய இரண்டாவது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.. பின்னர் மரகதம் தனது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்ய வில்லங்க சான்றிதழ் பெற்றார் .அப்போது அந்த நிலம் வேறு ஒருவரின் பெயரில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் .இது தொடர்பாக அவர் விசாரணை செய்ததில் ஈச்சனாரியை சேர்ந்த கார்த்திகேயன் உட்பட சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ. 60 லட்சம் இருக்கும். இது குறித்து கடந்த 20 22 ஆம் ஆண்டு மரகதம் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் .அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் செல்வம், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த
சில நாட்களுக்கு முன்பு ஈச்சனாரியை சேர்ந்த கார்த்திகேயனை கைது செய்தனர் .தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய நபரான தூத்துக்குடி மாவட்டம், கருங்குளத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் டேனியல் (வயது57) என்பவர் தேடி வந்தனர். தற்போது அவர் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது .இதையடுத்து போலீசார் நேற்று திருப்பூர் சென்று டேனியலை கைது செய்தனர் .பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0