சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.

கோவை போகோ நீதிமன்றம் தீர்ப்பு.கோவை செப்டம்பர் 30 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம் .இதனால் பள்ளி விடுமுறை நாட்களில் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். இதை அறிந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஷேக் பாபா ( வயது 65) என்பவர் சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2- 12 – 20 19 அன்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது .இது குறித்து தாய் விசாரித்த போது நடந்த சம்பவங்களை கூறி சிறுமி அழுதாள். மேலும் அந்த சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து புகாரின்பேரில் பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளீர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஷேக் பாபா வை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள் குற்றம் சாட்டப்பட்ட ஷேக் பாபாவுக்கு சாகுவரை ஆயுள்தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதி அரசு மூலம் வழங்கவும் உத்தரவிட்டார். ,