கோவை செப்டம்பர் 27 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் படி டி.என். பி .எஸ் . சி. சார்பில் குரூப் 2 மற்றும் 2 ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பாணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் 600-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சார்பதிவாளர், உதவி ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், மற்றும் உதவியாளர் போன்ற பல்வேறு பதவிகளுக்கான இந்த தேர்வு எழுத மாநில முழுவதும் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர் .தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இந்த தேர்வு எழுத கோவை மாவட்டத்தில் இருந்து 23, 650 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்து தேர்வை கண்காணிக்க டி.என்.பி.எஸ்.சி. சார்பில் 5 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு தேர்வு மையத்திற்கு ஒரு அலுவலர் வீதம் 82 ஆய்வு ஆய்வாளர்கள், 8 பறக்கும் பணியினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு மய்ங்களில் தடையில்லா மின்சாரம் , குடிநீர் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளது மேலும் காந்திபுரம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, உள்ளிட்ட இடங்களில் இருந்து தேர்வு மையங்களுக்குச் செல்ல சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





