கோவையில் ஒரே நாளில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை

கோவை செப்டம்பர் 8 கோவை அருகே உள்ள துடியலூர் என். ஜி. ஜி. ஓ காலனி, கங்கை வீதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 75)குடிப்பழக்கம் உடையவர் .இவர் குடிபோதையில் நேற்று துடியலூர் ரயில் நிலையம் சந்திப்பில் உள்ள ஒரு பூங்க மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல சிங்காநல்லூர் பக்கம் உள்ள கள்ளிமடை, ராஜ வீதியைச் சேர்ந்தவர் பாலா. இவரது மணி ருக்மணி (வயது 66) இவர் நீரழிவுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவரது வீட்டில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணவர் பாலசுப்பிரமணியம் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போல ஒண்டிப்புதூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 43. )இவர் நேற்று மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டாராம் அவர் கொடுக்க மறுத்ததால் மனைவியின் சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து மனைவி நித்யா சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.