கோவை அக்டோபர் 10 கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டையை சேர்ந்தவர் பாரதி ( வயது 27 )பெயிண்டிங் தொழிலாளி . இவரது மனைவி சுவேதா ( வயது 26 )தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும்கடந்த 9 ஆண்டுகள் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு கிரேஸ் (வயது 9 )கே பிரியல் (வயது 7) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுவேதாவின்நடத்தையில் பாரதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது .இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். ஏ.பி.டி. ரோட்டில் சுவேதா தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்தார்.நேற்று காலையில் அருகில் உள்ள பள்ளியில் குழந்தைகளைகூட்டிச்சென்றுவிட்டார். பின்னர் வீடு திரும்பி அவர் வேலை பார்க்கும் கடைக்குப் புறப்பட்டார் .பழனியப்பன் வீதியில் நடந்து சென்ற போது அங்கு மோட்டார் சைக்கிள் வந்த பாரதி அவரை வழிமறித்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார், அதற்கு சுவேதா மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சுவேதா அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். ஆனால் விடாமல் பின் தொடர்ந்து சென்ற பாரதி நடுரோட்டில் வைத்துமனைவி சுவேதாவை கத்தியால் குத்தினார் .இதில் அவரது வயிறு ,உட்பட பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. சுவேதா ரத்த வெள்ளத்தில் கிழே சாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை ரோட்டில் போட்டு விட்டு உடல் அருகே உட்கார்ந்து கொண்டிருந்தார். அலரை
பொதுமக்கள் மடக்கிபிடித்து போலீசில் ஒப்படைத்தனர் .போலீசார் அவரை கைது செய்தனர். அவரது உடல் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொள்ளாச்சியில் நடுரோட்டில் மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





