காட்டு யானை தாக்கி ஸ்கூட்டரில் சென்ற தொழிலாளி சாவு

கோவை செப்டம்பர் 26 கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணாம்பாளையம் பகுதியில் கொட்டமுத்து அம்மன் கோவில் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் இவருக்கு. சொந்தமான தோட்டத்தில் செந்தில் ( வயது 55 )என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் :இவர் நேற்று மாலை 6:30 மணி அளவில் டியூசனுக்கு சென்ற தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அவர் கொட்டத்து அம்மன் கோவில் அருகே மேடான பகுதியில் சென்ற போது காட்டு யானை ஒன்று எதிரே வந்தது .அதை பார்த்த செந்தில் தனது ஸ்கூட்டரில் வேகமாக சென்றார் .அப்போது காட்டுயானை அவரை பின்தொடர்ந்து சென்று செந்திலை தாக்கியது .குழந்தைகள் உயிர் தப்பினர்..இதில்படுகாயம் அடைந்த செந்திலை வானத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சை பலனளிக்காமல் செந்தில் இன்று காலையில் இறந்தார். இந்த நிலையில் செந்திலை தாக்கியது “ரோலக்ஸ் ” காட்டு யானை தான் தாக்கியது என்ற தகவல் பரவியது. இதனால் அவரை தாக்கியது ரோலக்ஸ் காட்டு யானை தானா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணைநடத்தி வருகிறார்கள்.