13 – வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை செப்டம்பர் 30 கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 39) கூலி தொழிலாளி .இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இது பற்றி அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் 20 21 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார் போக் சோசட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர் .இந்த வழக்கு விசாரணை போக் சோநீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள்குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணியனுக்கு 5ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.