கோவை செப்டம்பர் 24 கோவை அருகே உள்ள பி.என்.புதூர் இளங்கோவடிகள், வீதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி ரஞ்சிதா ( வயது 42) இவர் அவரது மாமா மகனிடம் காதல் வைத்திருந்தாராம்.இதை கணவர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கண்டித்தனர். ரஞ்சிதா கேட்கவில்லை .இந்த நிலையில்நேற்று காலையில் தனது மாமா மகனுடன் ரஞ்சிதா எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து அவரது தந்தை கணேசன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் காமாட்சி நாதன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





