ஓவர் குடியால் டிரைவர் சாவு

கோவை அக்28 கோவை கவுண்டம்பாளையம், சரவண நகர் பக்கம் உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர்ஜோஸ். இவரது மகன் ஜோனி ( வயது 34 )டிரைவராக வேலை பார்த்து வந்தார் .குடிப்பழக்கம் உடையவர். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார் .இவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் இது குறித்து அவரது தந்தை ஜோஸ் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.