பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக சிவ கணேஷ் இன்று பதவி ஏற்றார்

கோவை ஆகஸ்ட் 14 தமிழ்நாடு அரசு ,இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில் அறங்காவலர் குழுஉறுப்பினர்களாக சிவ கணேஷ் என்ற ஸ்ரீதேவி சிவா,சின்ன வேடம்பட்டி தர்மலிங்கம்,செம்மேடு சுதா,மத்வராயபுரம் கவிதா, சொக்கம்புதூர்வினோத்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.இவர்களில்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவ கணேஷ் என்ற ஸ்ரீதேவி சிவா இன்று மதியம் பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருக்குவடக்கு மாவட்ட தி.மு.க தலைவர் தொ. அ.ரவி,சுக்ரவார்பேட்டை அருள்மிகு,பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன்,மூத்த பத்திரிகையாளர் ஆர்.பி. கருணாகரன்,நகர அமைப்பு குழு தலைவர் சந்தோஷ்,மாவட்ட அமைப்பாளர்தென்னை சிவா,மகேஸ்வரன், குணா,தர்மலிங்கம், மற்றும் பலர் மாலைகள் -சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.மேலும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில்அறங்காவலர் குழு உறுப்பினர் களாகநியமிக்கப்பட்டுள்ள சின்ன வேடம்பட்டி தர்மலிங்கம்,செம்மேடு சுதா,மத்வராயபுரம் கவிதா,சொக்கம்புதூர் வினோத்குமார் ஆகியோரும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.இவர்களும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவ கணேஷ்க்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.அறநிலையத்துறை அதிகாரிகளும் கோவில் நிர்வாகிகளும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.