இரவுரோந்து பணியில் 2கொள்ளையர்களைபிடித்த காவலர்களுக்கு எஸ்.பி.கார்த்திகேயன் பாராட்டு. கோவைஜூன் 10கோவை அருகே உள்ள கே.ஜி. சாவடி பகுதியில் போலீசார் இரவு ரோந்து பணியில்ஈடுபட்டனர்.அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய 2 பேரை துரத்தி பிடித்துவிசாரணை நடத்தினர். அவர்களிடம் கையுறை, 2 செல்போன்கள் மற்றும் ஸ்குரூ டிரைவர் உள்ளிட்ட திருட்டு குற்றங்களில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஅவைகள் பறிமுதல் செய்யப்பட்டன..
மேலும் விசாரணையில், அவர்கள் கே.ஜி.சாவடி பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த நபரிடமிருந்து ஒரு செல்போனை திருடியதாக ஒப்புக்கொண்டனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இச்சம்பவத்தில்இரவு ரோந்து பணியில் நேர்த்தியுடன் செயல்பட்டு திருடர்களை கைது செய்த கே.ஜி. சாவடி காவல் நிலைய போலீசாரின் பணியை பாராட்டும் வகையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், நேற்று அந்த காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி அவர்களது சீர்மிகு பணியை பாராட்டினார்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0