கோவை விமான நிலையம் அருகில் கடந்த மாதம் 2 – ந் தேதி கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் .இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான கருப்பசாமி என்ற சதீஷ், கார்த்திக் என்ற காளீஸ்வரர் மற்றும் தவசி என்ற குணா ஆகிய 3 பேரை பீளமேடு போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர் . இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்டம் முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது . இந்த வழக்கு நேற்று விசாரணை வந்தது. அப்போது கைதான 3 பேரும் நீதிபதி விஜயா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர் .
இது பாலியல் தொடர்பு என்பதால் மகளிர் கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.. இதை யடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 2 – ந் தேதிக்கு நீதிபதி விஜயா ஒத்தி வைத்தார்..






