கோவை, மே 29- கோவை மத்திய சிறையில் போக்சோ கைதி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (67). இவரை கடந்த 2023ம் ஆண்டு ராசிபுரம் மகளிர் போலீசார் போச்சோ வழக்கில் கைது செய்தனர். அவருக்கு கோர்ட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை தொடர்ந்து ராமசாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக கைதிகள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் அவரை மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0