கோவை ஆகஸ்ட் 26 கோவை அருகே உள்ள வடவள்ளி ஐ.ஓ.பி காலனி, கணபதி நகரை சேர்ந்தவர் செல்வநாயகம். கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர்.இதனால் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் இந்த நிலையில் அவர் நேற்று அவரது வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன்அளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மனைவி திவ்யா கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்கு பதிவு செய்து சாரணை நடத்தி வருகிறார்.இதே போல கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம், ராதாகிருஷ்ணன் விதியை சேர்ந்தவர் பெருமாள் .இவரது மனைவி தனலட்சுமி ( வயது 70 )இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்து நேற்று அவரது வீட்டில் சாணி பவுடரை குடித்து மயங்கி கிடந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது மகன் முத்துக்குமார் ஆர் .எஸ் ..புரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0