ஊருக்குள் புகுந்த சிறுத்தை பூனையை கவ்வி சென்றது!!

மக்கள் பீதி.கோவை ஜூன் 28 கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டு யானைகள், புலி, சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.இதில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. இந்த நிலையில் கோவை அருகே உள்ள குப்பே பாளையத்தில் நேற்று அதிகாலையில் சிறுத்தை ஊருக்குள் புகுந்தது .அது சக்திவேல் என்பவரின் வீட்டின் அருகே அங்கும், இங்கும் சுற்றி திரிந்தது .அந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது .தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அது போன்று மதுக்கரை அருகே உள்ள முருகன் பதி கிராமத்தில் மற்றொரு சிறுத்தை புகுந்தது.அது அங்குள்ள தெருவில் சென்ற ஒரு பூனையை கவ்வி சென்றது .இந்த பகுதியில் கடந்த வாரத்தில் 3 ஆடுகளை சிறுத்தை அடித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் சிறுத்தை வந்து பூனையை கவ்விச் சென்றதால் அந்த பகுதி மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.எனவே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.