பூட்டிய வீட்டில் துப்புரவு தொழிலாளி பிணம்

கோவை ஜூன் 27 கோவை ஆர். எஸ். புரம். காமராஜபுரம், அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் கருணாகரன் ( வயது 48 )இவர் கோவை மாநகராட்சி 49 வது வார்டு துப்புரவுதொழிலாளியாக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உடையவர்.நேற்று காலையில் இவரது மனைவி வெளியே சென்ற போது கருணாகரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. கதையை தட்டியும் அவர் திறக்கவில்லை. அக்கம் பக்கம் உள்ளவகள் உதவியுடன் கதவைஉடைத்து பார்த்த போதுகருணாகரன் படுக்கையில்மயங்கி கிடந்தார்.அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்தார். இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்திருப்பதாக சந்தேகிக்க படுகிறது. இது குறித்து மனைவி கமலம் ஆர். எஸ். புரம். போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.