கோவை ஜூன் 27 கோவை தெற்கு உக்கடம் ,ஜி .எம் .நகர், காந்தி நகரை சேர்ந்தவர் முகமது முஸ்தபா ( வயது 36) இவர் உக்கடம் லாரி பேட்டையில்உள்ள மீன் மார்க்கெட்டில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.தனியாக மீன் வியாபாரமும் செய்து வந்தார். இந்த வியாபாரத்திற்காக அவர் வட்டிக்குபணம் வாங்கி இருந்தாராம்.அந்தப் பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.இந்த நிலையில்நேற்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள ஒரு வங்கிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது மனைவி ஹசினா பர்வீன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0