நீலகிரி மாவட்ட உதகை கோத்தகிரி சாலை செல்லும் பகுதி உழவர் சந்தை, மக்கள் அதிகமாக கூட கூடிய இடம், மற்றும் கோவில்கள் உள்ளன, இங்கு பாரம்பரிய மிக்க அரசு கலைக்கல்லூரி உள்ளது 500க்கும் மேல் மாணவ மாணவிகள் படிக்கும் இந்த கல்லூரிக்கு செல்லும் நடைபாதை பல மாதங்களாகவே கழிவு நீர் ஓடி அந்த நடைபாதை பாசையாக உள்ளது, இந்த மனித கழிவு நீர் அரசு கலைக் கல்லூரி விடுதி அருகே உடைபட்டு பல மாதங்களாகவே கழிவு நீர் வெளியேறி உள்ளது, இந்தப் பகுதியில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது, இந்தப் பகுதியில் அரசுத்துறை அலுவலகமும் உள்ளன, ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பல மாதங்களாகவே நீர்வீழ்ச்சி போல் கழிவு நீர் படிக்கட்டில் வழிந்து துர்நாற்றம் வீசி வருகிறது, இந்தப் பகுதி நகர மன்ற உறுப்பினரும் கண்டு கொள்வதில்லை, அப்பகுதி மக்கள் பலமுறையும் தெரிவித்து நடவடிக்கை எடுக்கிறது இல்லை என்று தெரிவிக்கின்றனர், சுற்றுலாத்துறை பகுதியாக உள்ள இந்த இடத்தில் கழிவு நீர் தேங்கி நிற்பதோடு சாலைகளில் ஓடுகிறது இங்கு கோவில் வழிபாடுகளும் உள்ளன, மற்றும் உணவு விடுதிகள் தேநீர் விடுதிகள் பலவிதமான உணவு வியாபாரங்கள், உழவர் சந்தை என முக்கிய மக்கள் பயன்பாடு கூடிய இடமாக உள்ளது இதனை உதகை நகராட்சி உடனடி நடவடிக்கை எடுத்து இந்த அரசு கலைக் கல்லூரி படிக்கட்டில் வடிந்து ஓடும் கழிவு நீரை சரி செய்ய அப்பகுதியில் நடந்து செல்லும் மாணவ மாணவிகள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர், இந்த நடைபாதை படிக்கட்டில் கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் நடந்து செல்ல மிகுந்த சிரமமும் ஆபத்து உள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர், மற்றும் இந்த கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்பதோடு அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை விளைவித்து வருகிறது, மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்??

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0