கோவை மே 29கோவை மத்தய சிறை மைதானத்தில் 45 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ 167கோடி செலவில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி மற்றும் தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து அமைக்கப்படும் இந்த பூங்காவில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளன. தற்போது பூங்கா பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருவதால் அவ்வப்போது பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது ஆனாலும் பணிகனா விரைவில் முடித்து பூங்காவை திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். செம்மொழி பூங்கா பணிகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-செம்மொழி பூங்காவின் முழுபனிகளும் முடிவடைந்ததும் சுற்றுச்சூழல் பொழுதுபோக்கு உள்கட்ட மைப்பு ஆகியவற்றுக்கு உகந்ததாக இருக்கும். இந்த பூங்காவில் 20 க்கும் மேற்பட்ட பல்வேறு வகைவகை தோட்டங்கள் இருக்கும் .அதில் நாடு முழுவதும் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய வகை மரங்கள் செடிகள் இடம் பெறும். இந்த பூங்காவில் மினி நீர்வீழ்ச்சி, ஆயிரம் இருக்கையில் கொண்ட மாநாட்டு மையம் , பாரம்பரிய வடிவிலான கட்டிடங்கள் அரிய வகை தாவரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறும் மேலும் அறிய வகை தாவரங்கள் விற்பனை செய்யும் நர்சரி இலவச வைபை , நவீன கழிவறை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள நிறுத்தும் இடங்களும் அமைக்கப்படும். பூங்காவில் 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சேமிப்பு தொட்டிகளும், ஜெர்மன் தொழில்நுட்ப வசதியுடன் மழைநீர் வடிகால் வாரிய வடிகால் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிந்து வருகிற ஆகஸ்ட் மாதம் செம்மொழி பூங்கா திறக்கப்படும் இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்