பிரபல கொள்ளையன் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்.!!

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கோவை பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பிரகாஷ் (வயது35) என்பவரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்தனர்.இவர் மீது வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். மேற்படி நபர் மீது குண்டர் தடுப்புசட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி வழிப்பறி வழக்கின் குற்றவாளியான பிரகாஷ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு வழங்கப்பட்டது..