தூக்கு போட்டு மூதாட்டி தற்கொலை!!

கோவை ஜூன் 3 கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் சஞ்சீவராஜ் .இவரது மனைவி பங்கஜம் மாள் (வயது 74 ) இவர் மார்பக புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகள் காயத்ரி கடைவீதி காவல்நிலையத்தில்புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.