கோவை ஜூன் 3 கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் தனியார் கார் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் கோவை சேர்ந்த சரவணகுமார் ( வயது 32) என்பவர் கார் டெலிவரி செய்யும் பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் ஷோரூம் மற்றும் அதன் அருகில் நிறுத்தப்பட்ட கார்களை ஆய்வு செய்தார் .அதில் ஒருஎலக்ட்ரிக் கார் மாயமாகிஇருந்தது. உடனே அவர் அந்த ஷோரூமில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது ஒரு காரின் அருகே மர்ம ஆசாமி ஒருவர் வந்து நிற்பதும் பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த காரை சுற்றி, சுற்றி வந்ததும், தொடர்ந்து அந்த ஆசாமி காரை திருடி சென்றதும் பதிவாகி இருந்தது. இந்த காரின் மதிப்பு ரூ. 20 லட்சம் இருக்கும் .இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்த வழக்கில் துப்பு துலக்க போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.இவர்கள் தீவிர விசாரணை நடத்தி தொண்டாமுத்தூர் அருகே உள்ள கந்தே கவுண்டன் பாளையத்தை சேர்ந்த கர்ணன் ( வயது 35) என்பவரை நேற்று கைது செய்தனர் ..அவரிடம் விசாரணை நடத்தியதில் ஷோரூமுக்கு சென்று கார் வாங்குவது போல நடித்து ரூ 20லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக்காரை திருடி சென்ற ஆசாமி அவர்தான் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.அவர் வேறு எங்காவது இதுபோன்று திருடி உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0