கோவை ஜூன் 24 கோவை துடியலூர் ஜி. என். மில். ஸ்ரீ வர்ஷா ரெசிடென்சி பகுதியில் வசிப்பவர் விஜயராகவன். இவரது மனைவி எழில் இளநங்கை ( வயது 47) பல் மருத்துவர்.இவரது வீட்டில் பெற்றோர்களும் வசித்து வருகிறார்கள்.இந்த நிலையில் வீட்டிலிருந்த17 பவுன் தங்க நகைகள், ஒரு வைர நெக்லஸ் ஆகியவற்றை திடீரென்று காணவில்லை.யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது .இது குறித்து எழில் இளநங்கை ஆர். எஸ். புரம் .போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இந்த தங்க வைர நகைகளை அவரது வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்த ஆர். எஸ். புரம். பூ மார்க்கெட்,மெக்ரிக்கர்ரோட்டை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 36) என்பவர் திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். தங்க – வைர நகைகள் மீட்க்கப்பட்டது.குற்றவாளியை கைது செய்து நகைகளை மீட்ட ஆர். எஸ் .புரம். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலான தனிபடையினரை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பாராட்டினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0