தப்பி ஓடும்போது மேம்பாலத்தில் இருந்து குதித்து கால் முறிந்தது .கோவை ஜூன் 19 கோவை சிங்காநல்லூர் பக்கம் உள்ள இருகூர், காந்திநகர், முத்துராமலிங்க தேவர் வீதியை சேர்ந்தவர் நாகரத்தினம் (வயது 80) சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று மூதாட்டி நாகரத்தினத்தின் கழுத்தில் கடந்த 4 பவுன் தங்க சங்கிலி பறித்துகொண்டு பைக்கில் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து நாகரத்தினத்தின் மகள் ஜென்னி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் நாகரத்தினத்தின் நகையை பறித்தது சென்னை பெரம்பூர் திரு.வி.க. நகரை சேர்ந்த முகமது சாதிக் (வயது 31) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில். இருகூர், பிளேக் மாரியம்மன் கோவில் பகுதியில் முகமது சாதிக் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் மடக்கிபிடித்தனர் அப்போது அவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை துரத்தி சென்றபோது. இருகூர் காந்திநகர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். காலில் பலத்த காயமடைந்த அவரை போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் இருந்து தங்கச் செயின் செல்போன் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. முகமது சாதிக் மீது வழிப்பறி நகை பறிப்பு, கஞ்சா கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள்உள்ளன.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0