கோவை மே 31 கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்சூர்யா (35) இவர், கடந்த ஜனவரி மாதம் 12 -ஆம் தேதி பொங்கல்|விடுமுறைக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார்.. பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்ததங்க நகைகள்காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்துஅளித்த புகாரின் அடிப்படையில் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில்தனிப்படைகள்அமைக்கப்பட்டது.இவர்கள்நடத்திய தீவிர விசாரணையின் போது,திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் தனசேகரன்(வயது37) என்பவர் மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை உறுதிசெய்தனர். இந்நிலையில் தனசேகரனை கைது செய்த காவல் துறையினர், திருட்டுச் சொத்துகளை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.மேலும் விசாரணையில், தனசேகரன் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள மற்றொருதிருட்டு வழக்குகளிலும் தொடர்புடையவர் என்பதுதெரியவந்ததுஇந்நிலையில் மேற்படி 2 வழக்குகளில் திருடிய 7 பவுன் தங்க நகைகள்பறிமுதல் செய்யப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0