கோவை திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள பூளவாடி புதூரை சேர்ந்தவர் மகுடேஸ்வரன் இவரது மகன் செல்வகுமார் ( வயது 20 )டிராக்டர் டிரைவர். இவர் நேற்று சுல்தான் பேட்டை வடவேடம்பட்டி ரோட்டில் டிராக்டர் ஓட்டிச் சென்றார். அப்போது டிராக்டர் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் கவிழ்ந்தது .இதில் டிராக்டர் ஓட்டிச் சென்று செல்வகுமார் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை இ. எஸ். ஐ.மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து அவர் தந்தை மகுடேஸ்வரன் சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
