கோவை ஜூலை 7 கோவை தெற்கு உக்கடம், கோட்டை புதூர், காந்திநகரை சேர்ந்தவர் சேட் என்று அப்துல் ஜாபர் (வயது 48 )இவரது மனைவி சமீம்நிஷா (வயது 45) இவர்களுக்கு ஷாருக் கான் ( வயது 26) என்ற மகனும் ,ஒரு மகளும் உள்ளனர். அப்துல் ஜபார் கூலி வேலைசெய்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அப்துல் ஜாபர் சரியாக வேலைக்கு செல்வதில்லை. சமீம் நிஷா சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது ஷாருகானும், அவரது சகோதரியும் அருகே உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்துல் ஜாபர் வீட்டில் அருகே வசிப்பவர்கள் ஷாருக்கானின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உங்கள் பெற்றோர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறினர். உடனே அவர் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு ஏதோ ஒரு வித துர்நாற்றம் வீசியது. உடனே அவர் தனது தாயாரிடம் ஏன்? துர்நாற்றம் வீசுகிறது. என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் வீட்டுக்குள் ஏதாவது எலி செத்து கிடக்கும். அதனால் துர்நாற்றம் வீசுகிறது என்று கூறினார். இதை தொடர்ந்து அவர் அப்பா எங்கே? என்று கேட்டுள்ளார். அதுக்கு அவர் கட்டிலில் படுத்து தூங்குவதாக கூறினார் .உடனே படுக்கைக்கு சென்று பார்த்த போது அப்துல் ஜாபர் கட்டிலில் படுத்த நிலையில் கிடந்தார். ஏற்கனவே தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் படுத்து தூங்குவதாக கருதி சென்று விட்டார் .இந்த நிலையில் மீண்டும் அவருடைய வீட்டில் இருந்து அளவுக்கு அதிகமாக துர்நாற்றம் வீசியது. உடனே அக்கம் பக்கத்தினர் மீண்டும் ஷாருக்கானுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர்அவர் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில்ஒருவித துர்நாற்றம் வீசியது. உடனே அவர் தனது தாயாரிடம் வீட்டுக்குள் ஏன் அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது? என்று கேட்ட அதற்கு அவர் மீண்டும் பூனை ஏதாவது செத்து கிடக்கும். அதனால்தான் துர்நாற்றம் வீசுகிறது என்றார். இதை யடுத்து அவர் துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது? என்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்து வருவது தெரிய வந்தது. உடனே அவர் படுக்கை அறைக்குச் சென்றார். அங்குஅவரது தந்தை உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார் இது பற்றி தகவல் அறிந்ததும் பெரிய கடைவீதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் உயிரிழந்த அப்துல் ஜாபரில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் கூறியதாவது:- அப்துல் ஜாபர் உயிரிழந்து 5 நாட்கள் இருக்கும். அவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் தனது கணவர் இறந்தது கூட தெரியாமல் அவரது பிணத்துடன் 6 நாட்கள் வசித்து வந்துள்ளார். அதிகமாக துர்நாற்றம் வீசியதால் மகன் வந்து பார்த்தபோது அப்துல் ஜாபர் உயிரிழந்தது தெரிய வந்தது .என்று கூறினர். கணவர் இறந்தது கூட தெரியாமல் அவரது பிணத்துடன் மனைவி 6 நாட்கள் தங்கி யிருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0