கோவை ஜூன் 25 கோவை மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது .இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 150 படிகள் ஏற வேண்டும். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக ரூ 5.20 கோடி செலவில் மின்சார லிப்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது 2 பகுதிகளாக உள்ளது .முதலில் வாகனங்கள் நிறுத்தும் இடத்திலிருந்து 14 மீட்டர் மேலே செல்லும் லிப்ட்டில் ஏற வேண்டும். இதை யடுத்து மேல் பாதையில் 35 மீட்டர் நடந்து பின்னர் மற்றொரு 8 மீட்டர் மேலே செல்லும் 2 – -வது லிப்டில் ஏற வேண்டும். 2 லிப்ட்களிலும் பக்தர்கள் ஏறினால் வாகன நிறுத்துமிடத்திலிருந்து 22 மீட்டர் உயரத்தில் உள்ள கோவிலின் மேல் தளத்திற்கு செல்லலாம்.. ஒவ்வொரு லிப்ட்டிலும் ஒரே நேரத்தில் 20 பேர் ஏறி இறங்கலாம்.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- கோவிலில் முதல் நிலை 14 மீட்டர் உயரம் லிப்ட் நிறுவும் பணி நிறைவடைந்துள்ளது. இரண்டாவது லிப்ட் அமைக்க மலை பாறைகளை தோண்டும் பணி நடந்து வருகிறது. இது வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும். இது தவிர முதல் கட்டமாக 689. 6 சதுர மீட்டர் பரப்பில் ஒரு புதிய அன்னதான மண்டபம் மற்றும்பொருட்கள் பாதுகாப்பும் அறை,மொபைல் போன்கள் காவலாளிகள் பாதுகாப்பு அறை ரூ.6 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.2-வது கட்டமாக மலைப்பாதையில் படிக்கட்டுகளை சரி செய்தல் மற்றும் பக்தர்களுக்கு 11 இளைப்பாறும் மண்டபங்கள் கட்டும் பணிகள்ரூ 10 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது இவர் அவர்கள் கூறினார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0