கோவை ஜூன் 17 தேனி மாவட்டம், வயல்பட்டியை சேர்ந்தவர் லீலாதரன். இவரது மகள் புவனேஸ்வரி ( வயது 22 )இவர் கோவை காந்திபுரம் 7-வது வீதி யில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்து “பேஷன் டிசைனிங் ” படித்து வந்தார்.நேற்று தனக்கு உடல் நலம் சரியில்லை மருத்துவமனைக்கு செல்வதாக விடுதி வார்டனிடமும், பெற்றோர்களிடமும் போன் செய்து விட்டு வெளியே சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை எங்கோ மாயமாகிவிட்டார்.அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது அண்ணன் சிவா ரத்தினபுரி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0