கோவை மே 15கோவை மாவட்டம் ஆலாந்துறையை அடுத்த போளுவாம்பட்டி பக்கம் உள்ள பூலுவபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்அபிமன்யூ ( வயது33) இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்கடந்த 2 வருடங்களாக பழைய கட்டடங்கள் மற்றும் இரும்பு உடைத்து “ஸ்கிராப்” வியாபாரம் செய்து வந்தார் .தற்போது மகனுக்கு பள்ளி விடுமுறை என்பதால், தனது மனைவி மற்றும் குழந்தைகளை ஒரு வாரத்திற்கு முன்பு மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு வீட்டில் தனியாக இருந்து வந்து உள்ளார்.இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் சுரேஷ்அபிமன்யூ தனது நண்பரான நரசீபுரத்தைச் சேர்ந்த சரவணன் (வயது28) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வைதேகி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள தோட்டத்திற்கு தங்குவதற்காக சென்று கொண்டு இருந்தனர்.நரசீபுரம் வைதேகி சாலையில் கிழக்கில் இருந்து மேற்காக சென்று கொண்டு இருந்த போது, எதிரே வந்த ஒற்றை காட்டு யானையைப் பார்த்து இருவரும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கு இருந்து தப்பி ஓடினர். அப்போது காட்டு யானை சுரேஷ் அபிமன்யூவை துரத்திச் சென்று தாக்கியது. இதில், அவரது தலை மற்றும் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதே இடத்திலேயே மயங்கி விழுந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போளுவாம்பட்டி வனத்துறை ஊழியர்கள், சுரேஷ்அபிமன்யூவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ்அபிமன்யூ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் கோவை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0