கோவை ஜூன் 16 கோவை புலியகுளம் ,மாரியம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் மூபினா (வயது 30) திருநங்கை.இவருக்கும் ,பக்கத்து வீட்டில் வசிக்கும் சண்முக சுந்தரம் மனைவி பரிமளா (வயது 39) என்பவருக்கும் வீட்டின் முன் வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரிமளா ,திருநங்கை மூபினாவை தகாத வார்த்தைகளால் திட்டி, கைகளால் தாக்கினாராம்.இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பரிமளா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதே போல பரிமளா கொடுத்த புகாரின் பேரில் திருநங்கை முபினா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0