கோவை ஜூன் 28கோவை அருகே உள்ள கணுவாய் ,அஜந்தா நகர் 8- வது வீதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சின்னத்தாய் ( வயது 72) இவர் நீரழிவு அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் மின்விசிறியில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மகள் சமுத்திரக்கனி வடவள்ளி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல கோவை, இருகூர், காந்திநகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி ( வயது 50) குடிப்பழக்கம் உடையவர் .இவர் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப் படைந்து ஜன்னல் கம்பியில் சால்வையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து இவரது மனைவி கல்பனா சிங்கநல்லூர்போலீசில் புகார் செய்தார்.சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0