கோவை ஜூன் 3 கோவை வடவள்ளிபோலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் நேற்று அங்குள்ள உழவர் சந்தையில் பகுதியில்ரோந்து சுற்றி வந்தார். அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார்,அவர்களிடம் 200 கிராம்கஞ்சா, 5 கிராம் ஹெராயின் போதை பொருட்கள்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சபிக்குல் இஸ்லாம் ( 22 )சாகில் அலி ( 19 ) என்பது தெரியவந்தது.இவர்கள் வடவள்ளி பகுதியில் தங்கியிருந்துஅந்தப் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0