கோவைஜூன் 12 கோவை உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில்இரும்பு கம்பியில் கேபிள் வயரை கட்டி ஒருவர் நேற்று தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதைஅந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராமநாதபுரம் போலீசார்சம்பவ இடத்துக்கு சென்றுவிசாரணை நடத்தினார்கள். உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட அவருக்கு 35 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து இராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0