கோவை ஜூலை 18 கோவை பேரூர் அருகே மாதம்பட்டி நொய்யல் ஆற்றில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக பேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டனர் .அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது .இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த பெண் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி ( வயது 47)என்பது தெரியவந்தது. அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பல்லடத்தில் வேலை செய்த போது இன்ப தாஸ் ( வயது 50 )என்பவருடன்பழக்கம் ஏற்பட்டுநாளடைவில் அதுகள்ளக்காதலாக மாறியது..செல்வி தனது கணவரை விட்டு பிரிந்து கள்ளக்காதலன்இன்ப தாசுடன் மாதம் பட்டி,நிழற்குடை பகுதியில் தங்கியிருந்து பழைய காகிதங்களை சேகரித்து வாழ்க்கை நடத்தி வந்தார் .இன்ப தாஸ் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தார் .அதை பார்த்து செல்வி அதிர்ச்சி அடைந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அடைந்த அவர் நாட்களுக்கு பிறகு கணவர் இறந்த இடமான நொய்யல் ஆற்றில்குதித்து தற்கொலை செய்து கொண்டார் .என்பதுவிசாரணையில் தெரியவந்துள்ளது..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0