பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் இன்று ‘ஆபரேஷன் சிந்தூர் ‘ ஐ தொடங்கியுள்ளது.இதற்குத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி”பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலுக்கு என்னுடைய பாராட்டுகள்.மாண்புமிகு பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நீதி வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும், நமது குடிமக்களைப் பாதுகாப்பதற்குமான நமது நாட்டின் அர்ப்பணிப்பை இந்தத் தீர்க்கமான நடவடிக்கை காட்டுகிறது”

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0