நரபலியா?போலீஸ் விசாரணை.கோவை செப்டம்பர் 15 கோவை இருகூர் அருகே உள்ள ராவுத்தூர் தரை பாலம் அருகே தண்டவாளத்தில் நேற்று ஒரு ஆண் குழந்தை பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு வயது இருக்கும். இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் அந்த குழந்தையின் உடல் அருகே மஞ்சள் குங்குமம், வெட்டப்பட்ட கோழியின் உடல், ரத்தம் ஆகியவை கிடந்ததது .இதனால் அந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல் பரவியது. 2 வயது குழந்தை தண்டவாள பகுதிக்கு நடந்து செல்ல வாய்ப்பு இல்லை. எனவே அந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. குழந்தையின் உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது .யாரை பிடிக்கவில்லை .இது குறித்து போலீசார் கூறியதாவது:- 2 வயது குழந்தை எப்படி உயிரிழந்தது? என்பது தெரியவில்லை. ரயிலில் சென்றபோது குழந்தை தவறி விழுந்து உயிர் இழந்ததா? அல்லது தண்டவாளம் ஒரத்தில் விளையாடிய போது இரயில் மோதி பலியானதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .நரபலி கொடுக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதற்கான எந்த அடையாளமும் இல்லை .அதற்கான வாய்ப்பும் அந்த பகுதியில் இல்லை. எனவே அந்த குழந்தை உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0