கோவை ஜூன் 3 கோவை கணபதி வரதராஜுலு நகரை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். இவரது மகன் ஜெயவர்த்தன் ட வயது 29 )இவரது வீட்டில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பக்கம் உள்ள குமார மங்கலத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகள் சரண்யா (வயது 19) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார் .கடந்த 8-ந்தேதி ஜெயவர்த்தன் வீட்டில்பீரோவில் இருந்த வைர கைச்செயின், வைர மோதிரம், ரூ.80 ஆயிரம்பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் ஜெயவர்த்தன் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி வழக்கு பதிவு செய்து ஜெயவர்த்தன் வீட்டில் வேலை செய்து வந்த சரண்யாவை நேற்று கைது செய்தார். இவரிடம் இருந்து வைர நகைகள் – பணம் மீட்க்கப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0