கோவை ஜூன் 18 கோவை சுந்தராபுரம் மைல்கல், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி சரஸ்வதி ( வயது 60) இவர் நேற்று கோவை புதூர் பிரிவில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு புல்லட் மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் சரஸ்வதி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார் .இது குறித்து .மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பைக் ஓட்டி வந்த ஆசாமியை தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0