120 மாத்திரைகள் தின்று தொழிலாளி தற்கொலை

கோவை ஜூலை 21 கோவை வேடப்பட்டி அருகே உள்ள பழனிச்சாமி நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சுந்தர்ராஜனின் பராமரிப்பில் அவரது மனைவியின் அண்ணன் மகன் சுரேஷ்குமார் ( வயது 31) இருந்து வந்தார். ஒர்க் ஷாப் தொழிலாளியானஅவர் வலிப்பு நோய்க்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார்.இந்த நிலையில் நடக்க முடியாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேஷ்குமார் 120 மாத்திரைகளை தின்றுவீட்டில் மயங்கி கிடந்தார் .அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..