நீலகிரி மாவட்ட உதகை வட்டம் தொட்டபெட்டா ஊராட்சி ஆடாசோலை பகுதியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், தொட்டபெட்டா ஊராட்சி ஆடாசோலை
சமுதாய கூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட
ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,
(04.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் எளிதாக
தெரிந்து கொள்ளும் வகையில், முகாமில் அரசு துறை அரங்குகள் அமைந்துள்ள
இடம் தொடர்பாக அறிவிப்பினை தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்
எனவும், பல்வேறு அரசு திட்டங்களின் சார்பாக வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு
கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்குமாறும், அரசுத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தார், மற்றும் முகாமில் அமைக்கப்பட்டுள்ள
மருத்துவ முகாம் தொடர்பான அறிவிப்பினை தெரிவிக்க வேண்டும் எனவும்,
பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பெற்று அதனை பதிவு செய்ய வேண்டும்
எனவும், இம்முகாமில் வழங்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு
காணப்படும் எனவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் அவர்களிடையே தெரிவிக்க
வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், “உங்களுடன்
ஸ்டாலின்” திட்ட முகாமில், சுகாதாரத்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு
அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை நேரில் பார்வையிட்டும், இ சேவை மையம,
ஆதார் கார்டு பிரிவு மற்றும் மே ஐ ஹெல்ப் யூ (காவல்துறையின் உதவி மையம்),
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட (KMUT) அரங்கம் உள்ளிட்ட அரசுத்துறை
அரங்கங்களை பார்வையிட்டார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், உதகை
வட்டாட்சியர் சங்கர்கணேஷ், உதகை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், வார்டு பேரூராட்சி கவுன்சிலர்கள் பொதுமக்கள் திரளாக பங்கேற்று பயனடைந்தனர்,