கோவை செப்டம்பர் 4 கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது மாணவர் .இவர் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார் .அவர் பள்ளியில் படித்த போது 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது .அந்த பழக்கம்நாளடைவில் காதலாக மாறியது .அவர்களின் காதல் கல்லூரிக்குச் சென்ற பிறகும் தொடர்ந்தது. இந்த நிலையில் மாணவர் ஆசை வார்த்தை காட்டி அந்த சிறுமியிடம் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார் .இதில் சிறுமி கர்ப்பமானார் . இதை அடுத்து அந்த சிறுமிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது .உடனே அவரை பெற்றோர்கள் மருத்துவமனைக்குஅழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த பொது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நடந்த சம்பவம் பற்றி சிறுமியிடம்கேட்டனர். இது தொடர்பாக அவர்கள் அளித்து புகாரின்பேரில் பெரிய நாயக்கன்பாளையம் அனைத்துபெண்கள் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த மாணவரை கைது செய்தனர் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0